ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
ஓட்டப்பிடாரம் அருகே ஆயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர் புளியம்பட்டி சிலை நடந்தது. போட்டிக்கு முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்..எல்..ஏ., யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன,.. இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி இரண்டாவது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டன.. சிறிய மாட்டு வண்டி. இதில் திருநெல்வேலி வி.எம்.சத்திரம் பாலன் வண்டி முதலிடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி இரண்டாவது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
தொடர்ந்து குதிரை வண்டி போட்டியில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டனர். . இதில் அவலாபேரி பாண்டி தேவர் குதிரை வண்டி முதலிடத்தையும், வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டி இரண்டாவது இடத்தையும், திருநெல்வேலி டவுன் கோகுலம் குதிரை வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பல மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன,.. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு களித்தனர்.