கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி
தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய
மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குமத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை
தொடர்ந்து காய்கறி, பழக்கடை மொத்த, சில்லறை வியாபாரிகள் தெற்கு
திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினார்கள்.இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அனுமதி பெறாமல் தனியார் சந்தை நடத்த தடைவிதிப்பதாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறிவித்தார். மேலும் கடைகளை காலி செய்ய சில நாட்கள் அவகாசம் அளித்தார். இந்த கெடு நேற்றுடன் ,முடிந்தது.இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) ,முதல் தெற்கு
திட்டங்குளம் தற்காலிக மார்க்கெட்டில் அமைக்கபட்டிருந்த 100 கடைகளும்
திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன,. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த கடைகளுக்கு காய்கறிகள்
கொண்டு வந்த வெளியூர் விவசாயிகள், கடைகள் மூடப்பட்டு இருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்..
கோவில்பட்டி வட்டார ,மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மற்றும் திட்டங்குளம் காய்கறி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் இதுபற்றி கூறியதாவது:-
இந்த மார்க்கெட் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. வியாபாரிகளுக்கு
சொந்தமான இடத்தில் கடைகள் நடத்த உரிய அனுமதிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெற்றவுடன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
அதுவரைநாங்கள் வேறு எங்கும் கடைகள் திறப்பதாக இல்லை.
மொத்த மார்க்கெட் செயல்படாததால் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கும, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படமால் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.