தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

ஆண்டுதோறும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான வருவாய் வழி திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம்ரூபாய் 1000/- வீதம் ரூபாய் 48,000/- வழங்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன்,பள்ளிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு கலந்து கொண்டு தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், பள்ளிக் குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன்,மணிக்கொடி,ரவிச்சந்திரன், பள்ளி முன்னாள் பொருளாளர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்,
