கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனியில் கடலையூர் மெயின் ரோட்டில் இருந்து மறவர் காலனிக்கு செல்லும் இணைப்பு சாலையை செப்பனிடக் கோரியும் , தாமல் நகர் பகுதியில் இருந்து வருகிற சாக்கடை கழிவுநீரை மறவர் காலனியில் இருந்து பெரிய வாய்க்காலில் இணைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேது ராமலிங்கம், கிளை செயலாளர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், முனியசாமி, கண்ணாம்பாள்,, தாலுகா குழு உறுப்பினர் ரெங்கநாதன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகவேல், சிராஜு, ஏ.ஐ.டி.யு.சி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
