கி.ரா. நினைவரங்கத்தில் குடி நீர் வசதி கோரி, காலி குடங்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (கி.ரா.) நினைவாக அமைக்கப்பட்டுள்ள கி.ரா.நினைவரங்கம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
=தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மட்டுமின்றி பொது மக்களும் நாள்தோறும் கி.ரா நினைவு அரங்கத்தினை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர். கோவில்பட்டி பகுதிமட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சாத்தூர், தென்காசி பகுதிகளில் இருந்து மக்கள் கி.ரா.நினைவரங்கத்தினை பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கி.ரா. நினைவரங்கத்தில் சில அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி இல்லை. இதனால் வருகை தரும் மக்கள் ,பள்ளி குழந்தைகள் அவதிப்படும் நிலை உள்ளது. டிஜிட்டல் நூலகத்தில் அந்த தொடு திரையில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். நூலகத்தில் புத்தகங்கள் கண்ணாடி பேழையில் காட்சிக்கு மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
கி.ரா எழுதிய புத்தகங்கள் அனைத்தும் வரக்கூடிய பார்வையாளர்கள் படிக்கும் வகையில் நூலக வசதியை மேம்படுத்த வேண்டும், மேலும் நினைவரங்கத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள் காய்ந்து சருகு போன்று காட்சியளிக்கிறது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் போது , கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்திலும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எனவே கி.ரா. நினைவரங்கத்தில் குடிநீர் வசதி, மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காலிகுடங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு . நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, நகர பொருளாளர் செண்பகராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர துணைத் தலைவர்கள் வின்சென்ட், சுப்புராஜ், நகரச் செயலாளர்கள் மணிமாறன், சரவணன், இளைஞரணி துணைத் தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
