தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு குடிமை பணியாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் கவர்னர் ரவி பேசும்போது, “வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கிக்கொண்டு தூத்துக்குடி மக்களை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தூண்டி விட்டு போராட்டம் நடத்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி விட்டார்கள் என்று சர்ச்சைக்குரிய வைகையில் பேசினார்.
இதனை யொடி கவர்னரை கண்டனம் தெரிவித்தும், கவர்னரை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் தமிழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ள ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்ட இறுதியில் செய்தியாளர்களிடம் எர்ணாவூர் நாராயணன் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழையும் தமிழகத்தையும் காப்பதற்காக பாடுபட்டு வருகிறார் ஆனால் கவர்னர் ரவி தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து வருகிறார் இதை கண்டித்தும் தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சி போராட்டமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி வரும் கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் “என்று தெரிவித்தார்
