• June 7, 2025

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பல்டி அடித்து ஆட்டோ மீது மோதிய கார்; 2 பேர் காயம்

 சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பல்டி அடித்து ஆட்டோ மீது மோதிய கார்; 2 பேர் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திரைப்படகாட்சிகளை மிஞ்சும் வகையில் கார் ஒன்று 3 முறை பல்டி அடித்து, தடுப்புகம்பிகளை சிதறடித்து, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்;ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் ராமராஜன்(42), இவரும் அதே ஊரைச் சேர்;ந்த பால்சாமி மகன் கோவிந்தராஜ்(43) என்பவரும் காரில் கோவைக்கு சென்றுள்ளனர். காரை ராமராஜன் ஓட்டிவந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பகுதியில் கார் வந்த போது திடீரென நிலை தடுமாறி முன்று முறை பல்டி அடித்து, தடுப்புக்கம்பிகளை தூக்கி எறிந்து சாலையில் மறுமார்க்கத்தில் கோவில்பட்டியில் இருந்து கட்டலாங்குளம் சென்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில் காரில் வந்த கோவிந்தராஜ், ஆட்டோ டிரைவர் கட்டலாங்குளத்தினை சேர்;ந்த கலைச்செல்வம்(42) இருவரும் பலத்த காயமடைந்தனர்.இது குறித்து தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்கைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *