கோவில்பட்டி வேலாயுதபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா; திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு

கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது,.
நேற்று 7-ந் தேதி மாலை நாடார் உறவின் முறை மகளிர் அணி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தினர்.
இன்று இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை 9—ந் தேதி காலை 6 மணிக்கு புனித நீர் மற்றும் பால்குடம் திருவீதி உலா, அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீப ஆராதனை -சக்தி நிறுத்துதல் நடக்கிறது. காலை 9 மணிக்கு பூச்சட்டி திருவீதி உலாவும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு அம்மன் புகழ் பாடும் கும்மி-கோலாட்டம்-வில்லிசை நடக்கிறது இரவு 7 மணிக்கு மேல் மகளிர் முளைப்பாரி ஊர்வலம் நடிபரும். இரவு 9 மணிக்கு பூக்குழி திருவிழா நடக்கிறது இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.. 10-ந்தேதி மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது,
