தே.மு.தி.க.சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது,இதில் தர்ப்பூசணி பழம்,நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது,
நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கி தண்ணீர்ப்பந்தலை திறந்து வைத்தார், நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுகுழு உறுப்பினர் எல்லப்பன் ரெங்கசாமி, கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், விளாத்திகுளம் ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி, மாவட்டமாணவரணி வீரோவன் ,மாவட்ட தொண்டரணி முத்துக்குமார், நகர நிர்வாகிகள் ராஜா, பாபு,மதிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
