• June 7, 2025

கோவில்பட்டி  பங்குனி உத்திர திருவிழா; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள்

 கோவில்பட்டி  பங்குனி உத்திர திருவிழா; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள்

கோவில்பட்டி செண்பகவல்லி உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா, இந்த ஊர் மக்களின் மிக முக்கியமான திருவிழாவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது,. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை 5-ந்தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம், 13-ந்தேதியும், தீர்த்தவாரி 14-ந்தேதியும், தெப்ப திருவிழா 15-ந்த்தேதியும் நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா , மக்களுக்கு பக்தி மட்டுமின்றி பொழுதுபோக்கு நாட்களாகவும் இருக்கும்.அந்த வகையில் கோவில் மைதானத்தில் விதவிதமான ராட்டினங்கள் கடந்த சில நாட்களாக பொருத்தும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் இன்று முடிவடைந்து பயன்படுத்துவதற்கு தாயாகி விட்டது,. மேலும்  திடீர் கடைகள் நிறைய உருவாகி வருகின்றன, சிறுவகளை கவரும் வகையில் பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்கள் அதிக அளவில் விற்கும் கடைகள் உருவாகின்றன,

மேலும் குளிர்பானம், உணவு பொருட்கள் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் கோவில் பகுதி களை கட்டத்தொடங்கி விடும். கூட்டம் அதிகம் கூடுவதை யொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் பலே ஆசாமிகளை கண்காணித்து பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொள்வார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *