கொரோனா : அலட்சியமாக இருக்க கூடாது- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 90 சதவீதம் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.
தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரிய அளவில் பதற்றமோ அச்சமோ கொள்ள தேவையில்லை. பாதுகாப்பாக இருந்தாலே குணப்படுத்தி விடலாம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்
அப்போது அமைச்சர் இ. பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஆகியோர் உடனிருந்தனர்,
