மஹாவீர் ஜெயந்தி:இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 2622வது மஹாவீர் ஜெயந்தி விழா செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது
ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார், கழுகுமலை 1008மஹாவீரர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலாளர் முகேஷ் ஜெயின் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மஹாவீரின் போதனைகளான கொல்லாமை,உண்மையே பேசு,திருடாதே, போன்ற போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.சி.எஸ்.டி ஆலோசனை குழு உறுப்பினர் விஜயன்,ரித்திக் ஜெயின்,பிரமேஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ரிங்கிள் ஜெயின்,ஆன்சிஜெயின் ஆகியோர் பக்தர்களுக்கு லட்டு வழங்கினாகள். ,இந்த நிகழச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமசுப்ரமணியன்,முத்து மாரியப்பன்,தொழிலதிபர் மகேஷ் மிட்டல்,கைலாஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
