• May 20, 2024

கராத்தே மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டய சான்றிதழ்

 கராத்தே மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டய சான்றிதழ்

கோவில்பட்டி இலுப்பையூரணி ஏஞ்சல் நரசரி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

வேல்ஸ் வித்யாலயா பள்ளி மற்றும் தெற்கு வண்டாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் பல்வேறு தனியார் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்,.

கருப்பு பட்டயத்துக்கான தேர்வில் வெற்றி பெற்ற ,மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் வழங்கப்பட்டது. இதற்கான தேர்வுகளை  கராத்தே மாஸ்டர்  விஜயராகவன் நடத்தினார்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொவில்பட்ட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் தெற்கு வண்டாளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ஆகியோர் தேர்வு பெற்ற கராத்தே மாணவ, மாணவிகளுக்கு  கருப்பு பட்டய சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

விழாவுக்கு ஏஞ்சல் நர்சரி பள்ளி தலமை ஆசிரியை மகாலட்சுமி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அனுக்கிரக ராமன்  ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழா முடிவில் ஏ.கே.அனைத்து விளையாட்டு வளர்ச்சி கழக செயலாளர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *