• June 8, 2025

15 பேருக்கு கலை விருதுகள்; பொற்கிழி,பட்டயங்களை  ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்குகிறார்

 15 பேருக்கு கலை விருதுகள்; பொற்கிழி,பட்டயங்களை  ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்குகிறார்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலைமன்றத்தின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்டஅளவில் அகவைமற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள்,விருதுகள் வழங்கிடத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

 இவ்விருதுகளைதமிழ்நாட்டின் கலைப் பண்புகளைமேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனைசிறப்பிக்கும் வகையிலும் மாவட்டஆட்சியர் செந்தில்ராஜ்  தலைமையில் செயல்பட்டுவரும் மாவட்டக் கலைமன்றங்களின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்துகலைஞர்களுக்கு கலைவிருதுகள் வழங்கிடஅரசுஆணையிடப்பட்டுள்ளது.

2021-2022ஆம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் .கி.செந்தில்ராஜ்;,  தலைமையில் நடைபெற்றதேர்வுக் குழுக் கூட்டத்தில் திருநெல்வேலி மண்டலக் கலைபண்பாட்டு மையஉதவி இயக்குநர்,தூத்துக்குடி மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்   தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தூத்துக்குடி சுற்றுலா அலுவலர்; ,தூத்துக்குட மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமைஆசிரியை மற்றும் கலைமாமணி வில்லிசை கலைஞர்  கோ.முத்துலட்சுமி,சிலம்பாட்டக் கலைஞர் கலைமுதுமணி எம்.சண்முகசுந்தரம்,ஓவியக்கலைஞர் கலைநன்மணி முருகபூபதி ஆகியோர் கலந்துகொண்டுவிண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்டஅளவில் சிறந்த கலைஞர்களாக,வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கீழ்க்காணும் கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

தூத்துக்குடி செல்வி, சு. பாலஅய்யணேஷ்வேணிகுரலிசை 

மேலூர் செல்வி. ச.பவதாரினி -பரதநாட்டியம்

தூத்துக்குடி செல்வி சா. ஜோஷினி -குரலிசை

கலைவளர்மணி கழுகுமலை மு.சொக்கலிங்கம்-தவில்;

ஓட்டப்பிடாரம் ரா.அருண்குமார்-கரகாட்டம்

வல்லநாடு எஸ்.கணேசன்-நாதஸ்வரம் 

கலைச்சுடர்மணி ஆழ்வார்திருநகரி அ.மணிகண்டன்சிலம்பம்

கோவில்பட்டி எஸ்.கார்த்திகை செல்வம்-ஓவியம்

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி பேராசிரியர் முனைவர் சே.செல்வம்-தப்பாட்டம்

கலைநன்மணி விளாத்திகுளம் எஸ்.கே.கலைச்செல்வி –வில்லிசை

தூத்துக்குடி ரா.அப்ராணந்தம்-தவில்

முத்தாளங்குறிச்சி எஸ்.காமராசு-நாடக எழுத்தாளர்

கலைமுதுமணி ஓட்டப்பிடாரம் எஸ்.தனசேகரன்-நாடகம்

விளாத்திகுளம் எம்.நகுலன்-வில்லிசை 

கோவில்பட்டி கே.ஜி.ஞானகுரு-ஓவியம்

மேற்படி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு,தூத்துக்குடி மாவட்டத்தில் 24-3-2023 அன்று மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ள தமிழிசை விழாவில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விருதுக்கான பொற்கிழி,பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிப்பார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *