• June 8, 2025

செவிலியர்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி 

 செவிலியர்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு பயிற்சி 

கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி மற்றும் சமுதாய நல செவிலியர்களுக்கு கோவில்பட்டி தமிழரசன் திருமண மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெய செல்வி பயிற்சிக்கு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பகுதி நேர செவிலியர் ரதி வரவேற்று பேசினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098,

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம்  தடுப்பது,பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து கல்வியைத் தொடர செய்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து  விளக்கி பேசினார்.

பயிற்சியில் பங்கேற்றவர்கள்

போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் உடன் கலந்த நன்னடத்தை அலுவலர்  சுபாஷினி பேசினார்.

இந்நிகழ்வில், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர செவிலியர் மற்றும் சமுதாய நல செவிலியர்கள்   கலந்து கொண்டனர்.பயிற்சியின் முடிவில் சமுதாய நல செவிலியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *