கவர்னர் பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவில்பட்டி நகர, தாலுகா குழு சார்பில் நேற்று மாலை பயனியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கவர்னர் ரவி, மார்க்சீயத்தை இழிவாக பேசியதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஜி.பாபு முன்னிலை வகித்தார்.
நகரர துணை செயலாளர் முனியசாமி,ம அலாவுதீன், ஏ.ஐ..டி.யு.சி.பஞ்சாலை தலைவர் பரமராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், ஏ.ஐ..டி.யு.சி மாநில குழு தலைவர் காசி விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றினார்.