கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமணப் பயிர்கள் வளர்ச்சி இயக்குநரகம் – இணைந்து விவசாயிகளுக்கான “மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள்” பற்றிய பயிற்சியை நடத்தின.
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 22.2.2023 அன்று இந்த பயிற்சி முகாம் நடந்தது.. இப்பயிற்சியில் பிச்சைத்தலைவன்பட்டி, தர்மத்துப்பட்டி, .விளாத்திகுளம், வடக்குப்பட்டி, சாத்தூர் மற்றும் நாpக்குடி விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். மேலும அவர் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.
தொடர்ந்து உதவி இயக்குநர் (தோட்டக்கலை) ஏ.மலர் “மிளகாய் -.பயிர் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்கள்” குறித்து உரையாற்றினார்
உதவி பொது மேலாளர் ((நபார்டு வங்கி), ஆர்.கே.சுரேஷ் ராமலிங்கம் விவசாயிகளுக்கான வேளாண் சார்ந்த தொழில் முனைவோருக்கான நபார்டுவங்கித் திட்டங்களை எடுத்துரைத்தார்.
முனைவர். இணைப் பேராசிரியர் கு.குரு, மிளகாயப் பயிர் சாகுபடியில்
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் பற்றி விளக்கினார். உதவி பேராசிரியர் முனைவர். சோ.மனோகரன், மிளகாய் பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விரிவாகப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் வேளாண்மை துணை இயக்குனர் , மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏ. நாச்சியாராம்மாள்,மாவட்ட அளவிலான வேளாண்மை திட்டங்கள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தொடக்கத்தில் முனைவர். உதவி பேராசிரியர் வி.சஞ்சீவ்குமார் வரவேற்று பேசினார். முடிவில் முனைவர்.இணை பேராசிரியர் கு. குரு, நன்றி கூறினார்.