சாலைப்புதூர் சுங்கசாவடி காவலரை தாக்கியதாக 3 பேர் கைது

திருநெல்வேலி வடக்கு வாகைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யாச்சாமி (வயது 38). கோவில்பட்டி அருகே கயத்தாறு சாலைப்புதூா் சுங்கச்சாவடியில் காவலாளியாக உள்ளாா்.
இவா், கடந்த சனிக்கிழமை இரவு பணியிலிருந்தபோது, அவ்வழியே விதிகளை மீறிச் சென்ற காரை தடுத்து நிறுத்தினாராம். அப்போது, காரிலிருந்தோா் அவரை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்குள்ள கண்ணாடியை சேதப்படுத்திச் சென்றனராம்.
இதுகுறித்து அய்யாச்சாமி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து , குறிச்சிகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் கிருஷ்ணன் (23), தெற்குத் தெரு சுடலைமுத்து மகன் பாா்த்தீபன் (27), சவலாப்பேரி கிழக்குத் தெரு சாமியா மகன் நவநீதகிருஷ்ணன் (24) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
