• May 20, 2024

கலை, இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா

 கலை, இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா

கோவில்பட்டி கரிசல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா. நூற்றாண்டு விழா மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு கலை, இலக்கிய போட்டிகளை நடத்தியது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. கலை இலக்கிய பெருமன்ற தலைவர் அமல்புஷ்பம் தலைமை தாங்கினார். நகர செயலாளார் முத்துராமன், பொருளாளார் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

எழுத்தாளர் பொன்னீலன், மருத்துவர் அறம், தமிழ் மாநில காங்கிரஸ் நகா தலைர் ராஜகோபால், கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலு ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினார்கள்.

முனைவர் சத்தியசீலன், வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா, எழுத்தளார் ராஜேஷ் ராதாகிருஷண்ணன், நாகராஜன்-ராஜ்யோகா, மணிகண்டன், பாலமுருகன், சக்தி செல்லப்பா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர், முடிவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெ.மணிகண்டன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *