• May 20, 2024

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவணநாத சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹீத், பூர்ணாஹுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியில் இருந்து 1௦.20 மணிக்குள் சாலை கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இரவு 7 .30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் அலங்கார ஆராதனையும் நாதஸ்வர வித்வான் எஸ்.என்.நடராஜன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *