கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்,
அதைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் பரிசுகள் வழங்கினார்,
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், நாராயணசாமி, முத்துச்செல்வம்,மாரியப்பன், பூல் பாண்டியன், பிரபாகரன், கிருஷ்ணசாமி, வீராசாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர், ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்டமூர்த்தி நன்றி கூறினார்.