டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசு தினவிழா
கோவில்பட்டி வேலாயுதபுரம குழந்தைகள் நல மையத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சங்கர், துர்கேஷ், நளினி,விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசாபேகம், மேற்பார்வையாளர்கள் விஜயா ராணி, பாலம்மாள், முத்துமாரி ஆகியோர் பேசினார்கள்.
குடியரசுதினத்தை முன்னிட்டு மாறுவேடப்போட்டியில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் கவுன்சிலர் தவமணி பரிசு வழங்கினார். செந்தில்நாதன் பாதயாத்திரை அன்னதான அறக்கட்டளை நிறுவனர் நாகராஜன் , தொழில் அதிபர் அமலி பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜாஸ்மின் லூர்துமேரி, லவராஜா, செல்வராணி , கன்னியம்மாள், அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக குழந்தைகள் நல பணியாளர் ஷபினா , உதவியாளர் யாஷ்மின்ஆகியோர் வரவேற்றனர்,.