• May 20, 2024

புதிய இடத்துக்கு மாறவில்லை: கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வழக்கம் போல் செயல்படுகிறது

 புதிய இடத்துக்கு மாறவில்லை: கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வழக்கம் போல் செயல்படுகிறது

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி  செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

இதனால் இங்குள்ள  கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது,

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் ராஜாராம், 26-ந்தேதி முதல் நகராட்சி தினசரி சந்தையில் உள்ள கடைகள் புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் என்றும் புதிய கடைகள் கட்டிமுடிக்கும் வரை அங்கு தான் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை ஏற்று தினசரி சந்தை கடைக்காரர்கள் மாற்று இடத்தில் வியாபாரம் செய்வார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. இன்று காலை வழக்கம் போல் பழைய சந்தையில் வியாபாரம் செய்தார்கள்.

வெளியூர்களில் இருந்து வந்த காய்கறிகள் அனைத்தும் பழைய சந்தைக்கே வந்தன. அது போல் சிறு வியாபாரிகளும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர்,. தினசரி சந்தை இயங்குவதை அறிந்த பொதுமக்கள்  வழக்கம் போல் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு குவிந்தனர்,

தினசரி சந்தை செயல்பாடு தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தலைவர் ஏ.பி.கே..பழனிச்செல்வம், செயலாளர் நீதிராஜன், பொருளாளர் அய்யாத்துரை, உதவி தலைவர்கள் ஜெகன்னாத், சின்ன மாடசாமி,காளிராஜா  ஆகியோர் பெயர்கள் உள்ள லெட்டர் பேடில் தலைவர் பழனிச்செல்வம் கையெழுத்துடன் கூடிய அறிக்கையில் இருப்பதாவது:-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *