கோவில்பட்டி நகராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

நாட்டின் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊழியர்கள், அலுவலகர்கள் திரண்டு இருந்தனர். காலையில் நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தேசிய கொடியேற்றினார். அதை தொடர்ந்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.
நகராட்சி பொறியாளர் பி. கே. ரமேஷ், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், காஜா நஜிமுதீன், வள்ளி ராஜ், வருவாய் அலுவலர் ரமேஷ் குமார், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
