• June 16, 2025

கோவில்பட்டி மின்வாரியத்தினரின் குளறுபடி; மீண்டும் மின்தடை ரத்தாகி தேதி மாற்றம்

 கோவில்பட்டி மின்வாரியத்தினரின் குளறுபடி; மீண்டும் மின்தடை ரத்தாகி தேதி மாற்றம்

‘கொவில்பட்டி கோட்டத்தில் மாதம் ஒரு முறை பராமரிப்பு காரணமாக 8 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார தடை அறிவிக்கப்பட்டு ந்டைமுரைப்படுத்தப்பட்டு வருகிறது,.

அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் மின்தடை அறிவிப்பதும் பின்னர் ஒரு காரணத்தை சொல்லி அதை ரத்து செய்து இன்னொரு நாள் மின் தடை என்று சொல்வதும் அடிக்கடி நடக்கும் செயல் ஆகிவிட்டது,

2 மாதங்களுக்கு முன்பு  இப்படி செய்த மின்வாரியம் மீண்டும் இன்று அதே தவறை செய்துள்ளது. ஏற்கனவே இன்று (21  ந் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை கோவில்பட்ட்டி கோட்டத்தில் ௮ துணை மின் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் மின்தடை என்று அறிவிப்பு வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே அதை ரத்து செய்து மாற்று  தேதியில் மின்தடை என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

மின்வாரியத்தினர் ஒரு தேதியை முடிவு செய்யும்போது அந்த நாளில் எதுவும் விசேஷம் உண்டா? என்பதை எல்லாம் பார்த்துவிட்டு அறிவிக்கவேண்டும். பொதுமக்களிடம் இருந்து வேண்டுகோள் வந்தவுடன் அவசர அவசரமாக தேதியை மாற்றும் மின்வாரியத்தினரின் குளறுபடி செயல் இனிமேலாவது நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று அறிவிக்கப்பட்ட மின்தடையானது தை அமாவாசையை முன்னிட்டு ரத்தாகி  24-ந்தேதி செவ்வாய்க்கிழமைக்கு  மாற்றப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *