• June 8, 2025

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா

 கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா இன்று  (13.1.2023) கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் கோ. பாஸ்கர், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசியர்கள், அலுவலர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போங்கல் விழாவை பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இணை பேராசிரியர் முனைவர். கு. குரு வாழ்த்துரை வழங்கினார்.

பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா தொடக்கத்தில் உதவிப் போராசிரியர் ஜெ. புவனேஸ்வரி வரவேற்று பேசினார். முடிவில் முனைவர் வி. சஞ்சீவ்குமார், நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *