• June 16, 2025

கோவில்பட்டி கோட்ட நுகர்வோருக்கு வாய்ப்பு: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்

 கோவில்பட்டி கோட்ட நுகர்வோருக்கு வாய்ப்பு: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்

கோவில்பட்டி மின்வாரிய கோட்டப் பகுதியிலுள்ள மின் மின்நுகர்வோர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இன்று (11-ந் தேதி))கோவில்பட்டி நகர், கிழக்குப் பகுதி திட்டங்குளம், பங்களா தெரு, மேற்கு பகுதி ஆலம்பட்டி, தோணுகால் விலக்கு, வடக்கு பகுதி கோவில்பட்டி, தெற்கு பகுதி கோவில்பட்டி, பாரதி நகர். கிராமப் பகுதிகளுக்கு காம நாயக்கன்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், தாமஸ் நகர், நாலாட்டின் புத்தூர், கயத்தார், கடம்பூர், கீழமங்கலம், எப்போதும் வென்றான். ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

12-ந் தேதி(வியாழக்கிழமை) கோவில்பட்டி, திட்டக்குளம், பங்களா தெரு, வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி, சாஸ்திரி நகர், மந்தித் தோப்பு, கழுகுமலை, எட்டயபுரம், லிங்கம்பட்டி, வெயிலுகந்தபுரம் கயத்தாறு, வடக்கு மயிலோடை, பசுவந்தனை, எப்போது வென்றான். கழுகுமலை

13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோவில்பட்டி, கணேஷ் நகர், கதிரேசன் கோவில் ரோடு கம்மவார் கல்யாண மண்டபம், காமராஜ் நகர், மந்தித்தோப்பு, கழுகுமலை, எட்ைடயபுரம், கடலையூர், வில்லிசேரி, கயத்தார் டவுன், பன்னீர் குளம், வண்டானம், சோழபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

இந்த வாய்ப்பை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *