பிரதமர் மோடி பற்றி அவதூறு பேச்சு: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது போலீஸ் நிலையங்களில் பா.ஜனதா ஒன்றிய தலைவர்கள் புகார்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், நாலாட்டின் புத்தூர் , எப்போது வென்றான், கழுகுமலை, கயத்தாறு உள்பட வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் உத்தரவின் பேரில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா ஆலோசனை படியும் நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கந்தசாமி ஜெகதீஷ் மாடசாமி ஜெய்சங்கர் ஆகியோர் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தினார்கள்.
