கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சட்சபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
“2024 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் முழு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் அதற்கான பணிகளில் இப்போதில் இருந்தே ஈடுபடவேண்டும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்,
