ஊர்க்காவல் படைக்கு தேர்வான 39 பேருக்கு பணிநியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த 14.12.2022 அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, 21.12.2022 அன்று தேர்வு நடைபெற்றது.
அதில் ஊர்க்காவல்படை,க்கு தேர்வான 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
