ஓடும் வேனின் உச்சியில் இருந்தபடி பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாட்டம்; 2 பேர் கைது
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அந்த வீடியோ காட்சியில் பதிவான வேன் நம்பரை கொண்டு விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வேன் உரிமையாளரான விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் இளவரசன் (வயது 27), மற்றும் பட்டாசுகள் வெடித்த ஜெயம் (25) ஆகியோர் மீது போலீசார் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.