திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.
இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
அதன்படி இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தர்ராஜா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பரமபத வாசல் வழியாக சவுந்தர்ராஜா பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஏராளமான பகதர்கள் கூடி இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்,
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. இதில் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்.செய்தனர்