கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை சுருங்கி வாறுகாலாக மாறுகிறது; ஆக்கிரமிப்புகளுக்கு வழிகாட்டும் அதிகாரிகள்…
கோவில்பட்டிமெயின்ரோட்டில் சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. வாடகைக்கு இருந்த கடைக்காரர்கள் தங்கள்
இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டி வியாபாரம் செய்து வந்தனர், இந்த ஆக்கிரமிப்பினால் சாலை சுருங்கி போனது. மேலும் ,மழைக்காலங்களில்
தண்ணீர் குளங்களுக்கு செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வந்தது. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடித்தது/ அரசியல் கட்சியினர் ,ஓடை மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின்
போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்புகளை
அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த கடைகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன,
இதன்பிறகு வெறுமனே பாதுகாப்பு இன்றி காட்சி அளித்த நீர்வரத்து ஓடை யின் ஒரு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் தடுப்பு சுவர் எழுப்பி பொதுமக்கள் நடந்து செல்ல
நடைபாதை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த நிலையில் நீர்வரத்து ஓடையின் மறுபுறம் உள்ள கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு
பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில் நிர்வாகம் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ஓடையின் மீது தற்காலிக இரும்பு
பாலம் அமைத்து இருந்தது. அந்த பாலத்தை இரவோடு இரவாக இடித்து விட்டு சிமெண்டு
காண்கிரீட் பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும், நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர் கோட்டாட்சியரை சந்தித்து
மனு அளித்தனர், இதை தொடர்ந்து அந்த கான்கிரீட் பாலம்
இடித்து தள்ளப்பட்டது. இந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க மறுபுறம் நீர்வரத்து ஓடையின் ஒருபுறம் தடுப்பு சுவர் கட்டுவதன் மூலம் நீரவரத்து ஓடை சுருங்கி வடிகால் போல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் நீர்வரத்து ஓடையில் தடுப்பு சுவர் கட்டுவது என்பது
திட்டமிட்டு ஆதரவாக நடந்து வரும் பணி என்றும் , ஏற்கனவே சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில்
மீண்டும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் வைத்துக் கொள்ள
வசதியாக இது போன்று செய்யப்படுவதாக குற்றரச்சாட்டு கூறப்படுகிறது.
3 ஆவின் பூத் கள் … ஒரு செருப்புக்கடை… என 6 கடைகளுக்கான பணிகள் முடிந்து சாலையோரத்தில் வைத்துக் கொள்ள
மறைமுகமாக உறுதி அளிக்கப்பட்டு… அதற்கான பலன்களையும் பெற்றுள்ளதாக கடுமையான குற்றசாட்டு எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.. எனவே மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றால் மாவட்டம் ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்..
நீர்வரத்து ஓடையில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இல்லை என்றால் , இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் சுரங்க பாலமாக மாறி மக்கள்
சந்தித்து வரும் அவல நிலை போல மழைக்காலத்தில் கோவில்பட்டி நகரம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்
அவசர கோலத்தில் அள்ளி தெளிந்தாற் போல் நடக்கும்
பணிகளை நிறுத்த வேண்டும்..
இந்த பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.