• June 7, 2025

கோவில்பட்டி புறநகர் பகுதியில் பஸ் – கார் மோதல் – 3 பேர் பலி

 கோவில்பட்டி புறநகர் பகுதியில் பஸ் – கார் மோதல் – 3 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புறநகர் பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், கோவில்பட்டி நோக்கி வந்த ஒரு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி நொறுங்கியது. பஸ்சும் பலத்த சேதம் அடைந்தது.


காரில் இருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் தப்பினார். உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டார்.
இறந்தவர்களை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் மற்றும் மேற்கு போலீசார் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *