சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 2 நாள் பயணம் : புயல் பாதிப்பு பகுதிகளை டி.ஜெயக்குமார் பார்வையிட்டார்

தமிழகத்தை அச்சுறுத்திய மாண்ட்ஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது, பின்னர் வலுவிழந்து அங்கிருந்து கடந்து சென்றது. இந்த புயலால் பெரும் அளவிலான சேதம் இல்லை. எனினும் மரங்கள் அதிக அளவில் சாய்ந்தன. ஒஇதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன,
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
மழை மற்றும் புயலால் பாதிக்கபட்ட மீனவர்களின் படகுகள், மற்றும் மீனவ கிராமங்களில் சேதமடைந்த வீடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார், பல இடங்களில் உணவு வழங்கினார்.

