கோவில்பட்டியில் மந்திதோப்பு செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து மந்திதோப்பு செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்,
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர துணை செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரோஜா,துணை செயலாளர் அலாவுதீன், தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேது ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
