இந்து கோவில்கள் அகற்றப்படாமல் இருக்கவேண்டி விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் பிரார்த்தனை

திருக்கார்த்திகை தினமான இன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்புறம் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் காளியப்பன் முன்னிலையில், திருக்கோவில் திருமடங்கள் மாவட்ட இணை அமைப்பாளர் தளவாய்ராஜ் தலைமையில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் இனிமேல் எந்த ஒரு இந்து கோவிலும் எவ்வித காரணமும் கூறி அகற்றப்படாமல் இருக்க செண்பகவல்லி அம்மனை வேண்டி நடந்த இந்த பிரார்த்தனையில் பா.ஜ.க.மாவட்ட பொதுசெயலாளர் வேல்ராஜா, பிரசாரபிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார், ABGP மண்டல ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், விஷ்வ இந்து பரிஷத் ஆனந்த கருப்பசாமி, கணேசன், பா.ஜ.க. ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்,.

