• June 8, 2025

ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கவர்னர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது-சீமான்

 ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கவர்னர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது-சீமான்

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இது அவருக்கு பெருமை அல்ல. இந்த நாட்டு மக்களுக்கு பெருமை. வாக்குக்காகத்தான் பா.ஜ.க., அம்பேத்கரை கொண்டாடுகிறத
என்.எல்.சி.யில் வேலை வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடப்போகிறோம். அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், வாக்காளர் அட்டை கொடுக்காதீர்கள்.
கவர்னர் 6-வது விரல். அதை வெட்டி எறிய வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கவர்னர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா தொடர்பாக அரசு எடுக்கிற முடிவுக்கு கவர்னர் ஒத்துழைக்கவில்லை.
இவ்வாறு சீமான் கூறினார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *