“பேனர் வைத்ததில் ஊழல்: ஆதாரம் என்னிடம் இருக்கிறது”-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

 “பேனர் வைத்ததில் ஊழல்: ஆதாரம் என்னிடம் இருக்கிறது”-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நம்ம ஊரு சூப்பர்’ இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை ஆதராத்துடன் என்னிடம் உள்ளது. தஞ்சாவூரில் 1 விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.603 சேர்த்து மொத்தம் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். டி.டி.வி.தினகரன் ,சசிகலா,ஓ.பி.எஸ்.க்கு எந்த நிலையிலும் இடமில்லை. தி.மு.க.வின் ஊது குழலாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார். அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்?
பா.ஜ.க. எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டார்கள். அதை அவர்களும் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு சுமுக உறவு உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. கவர்னரை சந்திக்கும் போது அரசியல் பேசவில்லை.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
பேட்டி முழு விவரம் newsj டி.வி.யில் ஒளிபரப்பானது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *