தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தம்
தூத்துக்குடியில் புயல், மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 12 நாட்களுக்கு பின்னர் விசைப் படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு படகு உரிமையாளர் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 250 படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.