நெல்லையில் வாலிபர் வெட்டிக்கொலை: கோவில்பட்டி கோர்ட்டில் முக்கிய குற்றவாளி சரண்

நெல்லை அருகே நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் கடந்த 21-ந்தேதி இரவு பேட்டை சிப்காட்அருகில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து , கோடகநல்லூர் பாலச்சந்தர் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில்இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நடுக்கல்லூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த கெங்காபாண்டியன் மகன் சுந்தரபாண்டியன்(30) என்பவர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கடற்கரைச் செல்வம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
