பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலியான பரிதாபம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை பகுதியில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று பகலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர்,
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,இந்த விபத்தில் 3 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேர் தீயில் கருகி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் பலியானதாகவும் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தீயணைப்பு துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
