• June 8, 2025

கெஜ்ரிவாலுக்கு உண்மை கண்டறியும் சோதனை; காங்கிரஸ் வலியுறுத்தல்

 கெஜ்ரிவாலுக்கு உண்மை கண்டறியும் சோதனை; காங்கிரஸ் வலியுறுத்தல்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார்.
ஒரு முதல்-மந்திரிக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்ததை ஒருவர் தெளிவாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை. எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *