• June 8, 2025

Month: December 2024

தூத்துக்குடி

மூதாட்டி கொலையில் உறவினர் கைது; பரபரப்பு தகவல்

தூத்துக்குடி 1-ம் கேட் முகமதுசாதலிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மனைவி செல்லம்மாள் (82). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்லம்மாள் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாளின் உறவினர் பொன்ராஜ் (42) என்பவரை போலீசார் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு பின்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு அறிவிப்புவரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகளும், தருவைகுளம் 200, வேம்பார் 50 விசைபடகுகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.  இந்த நிலையில் தற்போது வானிலை சீரடைந்து உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை […]

செய்திகள்

எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் – ஆதவ் அர்ஜுனா பேட்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக தெரிவித்து கட்சியில் இருந்து  ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா நேற்று அறிவித்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது; ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய […]

சினிமா

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து ஆழ்ந்த கவலை; நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) […]

சினிமா

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் கைவசம் “டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி” உள்ளிட்ட படங்கள் வரிசையில் உள்ளன. இதற்கிடையில், முன்னணி நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ‘புஷ்பா 1’ படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் பரவலாக பேசப்பட்டது. அதே போல் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த […]

ஆன்மிகம்

சோம வார விரதம்

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனுக்கு சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வாறுகால், மின்விளக்கு, குடிநீர், மற்றும் சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையில், மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது இந்திரா நகரில் உள்ள தெருக்கள் அனைத்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென […]

செய்திகள்

தொண்டர்களை அரவணைக்கும் தலைவராக இருந்தவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன்

ஈ,வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் என்னுடன் பழகிவந்தவர். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பரிந்துரையால் 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரானவர் .ஈ,வி.கே.எஸ், அந்த நன்றியை மறவாமல், நான் நடிகர்திலகம் சிவாஜிக்கு என்றும் நன்றிக்கடன்பட்டவன் என்று தவறாமல் குறிப்பிடுவார்.  சிவாஜி அவர்களைப் போலவே வெளிப்படையாகப் பேசுபவர்.  ஆனால், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் […]