தொண்டர்களை அரவணைக்கும் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன்

ஈ,வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் என்னுடன் பழகிவந்தவர். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பரிந்துரையால் 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரானவர் .ஈ,வி.கே.எஸ், அந்த நன்றியை மறவாமல், நான் நடிகர்திலகம் சிவாஜிக்கு என்றும் நன்றிக்கடன்பட்டவன் என்று தவறாமல் குறிப்பிடுவார்.
சிவாஜி அவர்களைப் போலவே வெளிப்படையாகப் பேசுபவர். ஆனால், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சிப்பவர்களை, கடுமையாகத் தாக்கிப் பேசத் தயங்காதவர். அதற்காக பல அவதூறு வழக்குகளை சந்தித்தவர்.
தொண்டர்களை அரவணைக்கும் தலைவராக, காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் கட்சியை தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் தூக்கிநிறுத்தியவர் ஈ,வி.கே.எஸ்
அன்னாரின் மறைவிற்கு நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
