• June 8, 2025

Month: November 2024

சினிமா

முழு மனதுடன் ரசித்தேன் – அமரன் படகுழுவினரை பாராட்டிய சிலம்பரசன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. உலகளவில் கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகினது. அமரன் திரைப்படத்தை பார்த்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் […]

செய்திகள்

8 மாத குழந்தையின் நுரையீரலில் எல்இடி லைட்: சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையை இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்களால் அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. எக்ஸ்ரேவில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பதாக தென்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு […]

சினிமா

கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகும் ‘தக் லைப்’ அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் நவம்பர் 7-ம் தேதி தக் லைப் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படகுழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் நாயகன் படத்துக்கு பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் […]

செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக […]

செய்திகள்

ஒரு நாளைக்கு 16 சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்கும் சுனிதா வில்லியம்ஸ்: அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு சூரியன் தோன்றுதலும், மறைதலும் நாளுக்கு ஒருமுறை காணும் நிகழ்வது அன்று. இப்போது அங்கு வசிக்கும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் பார்க்கிறாராம். நான் விண்வெளிக்கு செல்வதை விரும்பவும் அதற்காக கடுமையாக உழைக்கவும் ஒரு காரணம் உள்ளது. அங்கு ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் தோன்றுவதையும், 16 முறை மறைவதையும் பார்க்கும் நற்பேறு எனக்கு கிடைக்கும்” என்று ஒருமுறை கூறியிருக்கிறார் சுனிதா. தற்போது தொழில்நுட்ப […]

செய்திகள்

பட்டாசு வெடித்த 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை: அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31-ம் தேதி நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தரும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தபின், 104 பேர் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு […]

செய்திகள்

அமெரிக்கா தேர்தலில் வெற்றியாளாரை தேர்வு செய்த நீர்யானை

அமெரிக்கா அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று தங்களுடைய இறுதி பிரச்சாரத்தை முடித்தனர். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணி முதல் தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி சொன்னால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த சூழலில், […]

செய்திகள்

நாளை முதல் ஆவடியில் இருந்து சென்டரலுக்கு புதிய ரெயில் சேவை

சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரெயில் நாளை முதல் (நவம்பர்.6) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரெயிலின் பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளது. சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர் மின்சார ரெயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதில் தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த ரெயில்களின் சேவையை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்., ஆவடியில் […]