முழு மனதுடன் ரசித்தேன் – அமரன் படகுழுவினரை பாராட்டிய சிலம்பரசன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
உலகளவில் கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகினது. அமரன் திரைப்படத்தை பார்த்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சிலம்பரசனும் இணைந்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் அமரன் படக்குழுவினரை பாராட்டி எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அமரன் படத்தை முழு மனதுடன் ரசித்தேன். நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை சாய்பல்லவியும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிக புரொடக்ஷன் வேல்யூ கொண்ட படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள். ஜி.வி.பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளது. எடிட்டர் கலைவாணன், பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளர் சாய் மற்றும் திரில்லிங் சண்டைக்காட்சிகளை கொடுத்த அன்பறிவு ஆகியோருக்கும் பாராட்டுக்கள். உண்மை சம்பவத்தை தழுவி படத்தை அற்புதமாக செதுக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள்.
இவ்வாறு நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
