தமிழ்,தெலுங்கு,இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமிழகத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இவர் பாபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி,குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான ஜான்வி கபூரும் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாட்கால் நட்டல் நிகழ்ச்சி
திருப்பூவனம், திருமங்கை நகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி என்றெல்லாம் சிறப்பித்து கூறப்படும் கோவில்பட்டி திருத்தலத்தில் அன்னை செண்பகவல்லி பூவனநாதருடன் அருளாட்சி செய்கின்றாள். இங்கு அன்னை செண்பகவல்லியின் அருள் காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அன்னையின் பொற்பாதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது. இறைவன் இறைவியின் திருக்கல்யாணத் திருவிழாவானது அன்னை உலகத்தை காத்தற் பொருட்டு இறைவனை வேண்டி தவம் இயற்றி அவன் அருளை உலகத்தில் வாழும் உயிர்கள் பெறும்படி செய்தல் ஆகும். இறைவன் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-‘ “1959 ஆம் ஆண்டு இந்திய படைக்கலச் சட்டத்திற்குட்பட்டும், அதன் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 2016 ம் ஆண்டு படைக்கல விதிகளின் படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் படைக்கல உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து உரிமதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை: படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2024 உடன் முடிவடையும் படைக்கல உரிமதாரர்கள் அவர்களது ஒற்றைக்குழல். இரட்டைக்குழல் துப்பாக்கி. எஸ்.பி.எம்.எல், டி.பி.எம்.எல், ரைபிள். ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்க 01.01.2025 முதல் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில்., சீன் அப்போட், கூப்பர் கன்னோலி, ஜேக் ப்ரேசர் […]
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி இருக்கிறார். அவை பின்வருமாறு… *15.10.2024 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். *15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை […]
திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி; காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான கிருஷ்ணாபுரம், வெங்கடாஜலபதி திருக்கோயிலில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.. ‘தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் […]
நடிகர் பாலா தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, காதல் கிசு கிசு, கலிங்கா, வீரம்,அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர் சிறுத்தை சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து […]
லைட்டர்கள் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை;கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இருப்பின்னும் உற்பத்தியில் 80 சதவிகித தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. […]
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் […]