• June 7, 2025

Month: September 2024

கோவில்பட்டி

 திருநெல்வேலி-தூத்துக்குடி ரெயில் மீண்டும் இயக்கம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வந்த  திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரெயில் கடந்த மாதம் 19-08-2024 முதல் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.. இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,சென்னை கோட்ட ரெயில்வே உதவி மேலாளர் மதுரையில் மண்டல மேலாளரிடம் ஆகியோரிடம்  ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரெலை மீண்டும் இயக்க வேண்டும் இல்லை என்றால் […]

ஆன்மிகம்

பழைய ராமேசுவரம்”என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில்

.திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை […]

சினிமா

`திரைப்பட விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்’-

இயக்குனர் அமீர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறி இருப்பதாவது:- எந்த விதமான தகுதியோ, அறிவில் தேர்ச்சியா, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும். அதே போல பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு […]

சினிமா

50 வயதுக்கு மேல் படித்து 3 பட்டங்கள் பெற்ற நடிகர் முத்துக்காளைக்கு நடிகர்

தென்னிந்திய நடிகர்_சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்  நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ப[பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் லதா, ரோகினி,கோவை சரளா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மேலும் நடித்துக்கொண்டே  நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் […]

செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.850 கோடி முதலீடு;

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு  நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் முதலீடுகள் செய்தன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சான்பிரான்சிஸ்கோவில் 5 நாட்கள் தங்கி இருந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பினனர் சிகாகோசென்றார், அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் புதிதாக 5ந்தேதி […]

செய்திகள்

அரசு பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்

சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மகா விஷ்ணு என்பவர் பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினார். மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணு, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்தார்.மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத்திறனாளிகளாக பிறக்கவும் அதுவே காரணம் என்றும் கூறினார். மறுபிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றும் கூறினார்அப்போது, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை […]

செய்திகள்

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு நிதி அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், அமைச்சர்கள் இருவர் […]

செய்திகள்

ஆசிரியரை அவமரியாதையாக பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார். இந்த நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி […]