திருநெல்வேலி-தூத்துக்குடி ரெயில் மீண்டும் இயக்கம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வந்த திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரெயில் கடந்த மாதம் 19-08-2024 முதல் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது..
இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,சென்னை கோட்ட ரெயில்வே உதவி மேலாளர் மதுரையில் மண்டல மேலாளரிடம் ஆகியோரிடம் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரெலை மீண்டும் இயக்க வேண்டும் இல்லை என்றால் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மணு அளித்தார்.
இதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்குவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மறியல போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி -தூத்துக்குடி பயணிகள் ரெயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
திருநெல்வேலியில் புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி வந்த அந்த ரெயிலுக்கு ரெயில் நிலையத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா , யூனியன் சேர்மன் .ரமேஷ் ஆகியோர் வரவேற்று தூத்துக்குடியை நோக்கி கொடி அசைத்து தொடக்கி வைத்தார்கள்..\
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒட்டநத்தம் சரிதா கண்ணன் ,மணியாச்சி பிரேமா, கொடியங்குளம் அருண்குமார், அக்கநாயக்கன்பட்டி .அய்யாத்துரை, கலப்பைபட்டி சண்முகசுந்தரி தங்கராஜ், பாறைக்குட்டம் மாடசாமி ,முறம்பன்.தேன்மொழி சுடலைமணி ,பரிவில்லிக்கோட்டைபெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
